பொன்மொழிகள்
*உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல்
*அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும்.
*உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி சொல்லாதீர்கள்.
*உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்
*வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.
*ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.
*அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
*கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி.
*நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது.
*மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது.
*பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.
* தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்து தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல்பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தை நமக்கு பரிசாகத் தருகிறது. பயந்தவர்கள் எதிலும் துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டும்.
*நல்ல சிந்தனைத் திறன் மட்டும் இருந்தால் போதாது, அதை எப்போதும் செயல்படுத்திக்கொண்டே கடைசிவரை வாழ்வதில்தான் வெற்றியையும், மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.
*மயக்கம், தேவை இல்லாத பயம், அளவுக்கு மிஞ்சிய தூக்கம்,ஆத்திரம்,சோம்பல்,எதையும் தாமதமாக செய்தல், இந்த ஆறு குனங்களும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டைகள்.
*சிக்கனத்தைக் கடைப் பிடிக்காத எவருமே செல்வந்தனாக முடியாது. சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எவரும் ஏழையாகவும் இருக்க முடியாது.
*எதிலும் சிக்கனம் பிடிப்பவர் மன்னிக்க முடியாத கருமி. சிக்கனம் செய்யாதவன் பைத்தியக்காரன்.
*சில்லறைக் காசை நீ காத்துக் கொள்ள. பெரிய காசு உன்னைத் தானாக காத்துக் கொள்ளும்.
*சிறிய செலவுகள் பற்றிக் கவனமாயிருங்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பல்களையும் கவிழ்க்கும்.
*சிக்கனம் சிறியதொரு வருமானம்.
*சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.
* அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
*அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
*முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
*கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
*எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!
*நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.
*கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.
*என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.
*துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.
*எந்த இடையுறு இன்னல்களையும் அனுபத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக் கூடிய வன்மை உடையவனாக பிரகாசிப்பான்.
*ஓன்றின் தோல்வி மற்றொன்றின் வெற்றி, ஒன்றின் அழிவு மற்றொன்றின் ஆக்கம், ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம். இந்த அழிவு ஆக்கங்களிலிருந்தே மனிதனுடைய எண்ணம், சக்தி, செயல் எல்லாம் வளர்ச்சியடைந்து வருகின்றன.
*பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
*பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.
*தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம். எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
*என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.
நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.
*மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.
*இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பில்லாத படகு போன்றது.
*முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளையிடும் பதவி உங்களுக்குத் தானாக வந்து சேரும்.
*நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று, நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய வெற்றியாகும்.
*துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
*எந்த ஒரு மனிதனுடைய செயலிலும் தவறுகள், குறைகள் ஏற்படலாம். அவற்றை அவ்வப்போது நிரந்தரமாகத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மனிதத்தன்மையும் அதுவேதான்!
*பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய். பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்.
*மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வதே மேல்.
*ஒரு மனிதன் விழாமல் வாழ்ந்தான் என்பது பெருமையல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.
*தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்! வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்! இதுதான் வாழ்க்கையின் இரகசியம்.
*எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்தல்ல நம் சந்தோஷம். நமக்கு இருப்பவற்றை எந்த அளவு நாம் உணர்ந்து, மகிழ்ந்து போற்றி ஆராதிக்கிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் சந்தோஷம்.
*நாம் வாழ்வதின் நோக்கம் - மகிழ்ச்சி சமாதானம் தான். ஆனால்… இதை மறந்து வாழ்வதின் நோக்கம் வெறும் பொருள் சேர்க்க மட்டுமே என்றாகிப் போனால், நிச்சயம் அங்கு மெய்யான மகிழ்ச்சிக்கு தட்டுப்பாடாக இருக்கும்.
*கூட்டம் கூடுதல் எளிதான காரியம் ஆனால் ஒன்றுபடுவதுதான் கடினம். உழைப்பும் தியாகமும் சேர்ந்தால்தான் இந்த ஒற்றுமை உணர்ச்சி பிறக்கும்.
*சொல்லில் சுத்தமும, சிந்தனையில் நேர்மையும், செயலில் துணிவும் கூடவே மற்றவர்களையும் தம்மைப்போல் மதிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
*தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அதனை திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.
*வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.
*பத்திரிகைகளும், புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறியவேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நாம் போக வேண்டிய இடத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்காது.
*வெட்டிதனமாக இருப்பதிலும், சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாயவிடக்
கூடாது என்பதில் விடாப்பிடியாக இரு. அதிகமாக உணர்வதில் ஏராளமாகக்
கற்றுக்கொள்வதில் நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு.
*அலட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்.
விசயங்கள் எப்படிவருகிறதோ அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.
*தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புபவர்க்கு தேவையான அடிப்படை தகுதி
முழுமையான பொறுப்புணர்வு.
*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார்முன்னும் எப்போதும் மண்டியிடுவது இல்லை.
*சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்.
*அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!
*நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.
*கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.
*என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.
*துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல, அவை எப்போதும் பாலத்தின் அடியில் ஓடுகின்ற தண்ணீரைப்போல் ஓடிவிடும்.
*தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
*மற்றவர்களை எடை போடுவதில் காலத்தைச் செலவழிக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும்.
*வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும். சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.
*பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.
ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது.
*தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது.
றோமில் ராஜ்
This website is hosted for free by .
Get your own Free Website now!
|